search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் கன மழை"

    கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் முட்டை விற்பனை 20 சதவீதம் குறைந்து விட்டது. இதுபோன்ற காரணங்களால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 ரூபாய் 53 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மேலும் 20 காசுக்கள் குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பண்ணை முட்டையின் கொள்முதல் விலை 3 ரூபாய் 33 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. வடமாநிலங்களில் ஸ்ராவண் பண்டிகை காரணமாக முட்டை விலை குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் முட்டை விற்பனை அங்கு பழைய நிலையை எட்ட வில்லை. அங்கு 20 சதவீதம் விற்பனை குறைந்து விட்டது. இது போன்ற காரணங்களால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைக்கப்பட்டது.

    மேலும், என்.இ.சி.சி. நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து பண்ணையாளர்கள் 50 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்வதாலும் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

    அதுபோல் ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.72 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ.62 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


    புதுவை அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் கேரளத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி எண்ணப்படி அதிகளவு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KeralaFloods #Narayanasamy
    புதுச்சேரி:

    கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் இருந்து அந்த மாநிலத்துக்கு நிவாரணத் தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்டை மாநில மான தமிழகம் அதிகளவு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.



    தமிழகத்தைப் போல புதுவை மாநிலமும் உதவி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி விருப்பம் தெரிவித்தார். அதற்காக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    இதை ஏற்று அரசு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினர்.

    இந்த நிலையில் கேரள அரசு முல்லைப் பெரியாறில் இருந்து தமிழக அரசு நீரைத் திறந்து விட்டதால் தான் வெள்ள சேதம் ஏற்பட்டது என்றும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக்குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இதையடுத்து உச்சநீதிமன்றமும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க உயரத்தை குறைக்கும்படி உத்தரவிட்டது. கேரள அரசின் இந்தச் செயல் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கேரளத்துக்கு தொடர்ந்து உதவ வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் அவ்வாறு உதவினாலும் கேரள மக்கள் தமிழர்கள் மீது அன்பு காட்ட மாட்டார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவை அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் தங்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்காமல் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ள அனுமதிக்க கடிதம் கொடுத்திருந்தாலும், ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்தைப் பிடித்தம் செய்து விருப்பம் தெரிவித்து தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்டு கடிதம் வழங்க வேண்டும்.

    அவ்வாறான கடித நகல் கடந்த வியாழக்கிழமை துறைத் தலைமை அலுவலகம் சார்பில் அனைத்து ஊழியர்களிடமும் வழங்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் கேரளத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் கடிதம் தரமறுத்து வருவதாகவும் தெரிகிறது.

    இதனால் கேரள மக்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எண்ணப்படி அதிகளவு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KeralaFloods #Narayanasamy

    கேரளாவில் கன மழை தொடர்வதால் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கன மழைக்கு 29 பேர் பலியாகினர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    தற்போது இடுக்கி அணை உள்பட 24 பெரிய அணைகள் நிரம்பியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். தமிழக அரசு பஸ் மற்றும் ஜீப்புகளில் தினந்தோறும் சென்று திரும்புகின்றனர்.

    கட்டப்பணை, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிக அளவு இல்லா போதும் தற்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே தோட்ட வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தமிழக-கேரள எல்லையில் உள்ள தமிழக சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்புகின்றனர். மேலும் 2 நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    வேலை இழந்துள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. மழைக்கு இதுவரை மாநிலம் முழுவதும் 20 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேங்கிய மழைநீர் வழிந்தோட வழியில்லாததால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. சில இடங்களில் தெருக்களில் நிறுத்தி இருந்த கார்களும் மூழ்கிவிட்டன.

    ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வீடுகள் இன்றி தவித்து வருகிறார்கள். கோட்டயம் காலனி பகுதிகளில் வசித்து வரும் தமிழக சிறு வியாபாரிகள் குடும்பத்தினருக்கு தமிழர் நல்வாழ்வு சங்கம் சார்பில் அரிசி மற்றும் துணிமணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    பலத்த மழை மற்றும் சேதம் காரணமாக கோட்டயம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆலப்புழை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டத்திலும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் பரவலாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக இடுக்கி அணை உள்பட முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×